shadow

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐந்து சவரனுக்கு மேல் கடன் வாங்கியவர்களின் கடன்களை உடனடியாக வசூலிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

ஐந்து சவரனுக்கு மேல் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற கடன்களை வசூலிக்க அனைத்து கூட்டுறவு மண்டல மேலாளர் இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு கடன்களை வசூலிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது