shadow

முதல்வர் பழனிச்சாமி, ஓபிஎஸ்-க்கு காந்தி பேரன் கடிதம்

துணைக்குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வேட்பாளராக களமிறங்கியுள்ல மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, தனக்கு ஆதரவு தரும்படி அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, உள்ளிட்ட தேசத் தலைவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல் கட்சிகளையும் தாண்டி தன்னை ஆதரிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமக்கு ஆதரவு நல்கிய திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

இதனிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்திக்கு பாமக ஆதரவு அளித்துள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோபாலகிருஷ்ண காந்தியிடம் ஆதரவு அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் உறுதியளித்தார்.

Leave a Reply