கணவரை விவாகரத்து செய்த 25 வயது பெண் அதன்பின் செய்த அதிர்ச்சி செயல்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அவரது தந்தையை அதாவது மாமனாரை மறுமணம் செய்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும் 27 வயது ஆண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற மணமகள், கணவருடன் அதிகம் பழகாமல் ஒட்டாமலும் இருந்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் கணவரின் தந்தையிடம் அவர் சகஜமாக பழகியதாக தெரிகிறது
இந்த நிலையில் திடீரென தனது கணவரை விவாகரத்து செய்வதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கணவன் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டார்

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் விவாகரத்து கிடைத்த நிலையில் விவாகரத்து கிடைத்த அடுத்த சில நாட்களில் அவர் தனது முன்னாள் கணவரின் தந்தையை திருமணம் செய்துகொண்டார்.
இதனால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

இருவருக்கும் இடையே எப்படி பழக்கம் ஏற்பட்டது? திருமணம் செய்யும் அளவுக்கு எப்போது நெருக்கமாக இருந்தார்கள்? என்பது குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் அந்த குடும்பத்தினர் உள்ளனர்.

Leave a Reply