shadow

காஷ்மீரை பிரிக்க நினைப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள். கவுதம் காம்பீர் ஆவேசம்

சமீபத்தில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரை ஜிகாதிகள் சிலர் தாக்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இந்திய வீரர் தாக்கப்பட்டது குறித்து கமல்ஹாசன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர்களான கவுதம் காம்பிர் மற்றும் சேவாக் ஆகியோர் தங்கள் டுவிட்டரில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

கவுதம் காம்பீர் தனது டுவிட்டரில், ‘’நம் வீரர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும். காஷ்மீரைப் பிரிக்க நினைப்பவர்கள் வெளியேறுங்கள். காஷ்மீர் எங்களுடையதே’ என ஆவேசமாகக் கூறினார்.
அதேபோல வீரேந்திர சேவாக் தனது டுவிட்டரில் ‘இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நம் வீரர்களை இவ்வாறு செய்திருக்கக்கூடாது. இந்தக் கொடுமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன் இதுகுறித்து தனது கண்டனத்தை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\

For every slap on my army’s Jawan lay down at least a 100 jihadi lives. Whoever wants Azadi LEAVE NOW! Kashmir is ours.

This is Unacceptable ! Cant do this to our CRPF jawaans .This rot has to stop. Badtameezi ki hadd hai.

Leave a Reply