ஆர்.கே.நகரில் போட்டியிட பாஜக முடிவு:மீண்டும் கங்கை அமரனை நிறுத்த திட்டம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட மதுசூதனன், டிடிவி தினகரன், தீபா மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆகியோர் மீண்டும் களமிறங்கும் நிலையில் பாஜகவும் கடந்த முறை போட்டியிட்ட கங்கை அமரனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியபோது, ‘ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து மாநிலத் தலைவர் தலைமையிலான தேர்தல் பணிக்குழு ஆலோசித்து முடிவெடுக்கும். அந்த முடிவை அகில இந்திய தலைமைக்கு தெரிவிப்போம். அவர்கள் இறுதி முடிவை எடுப்பார்கள்’ என்று கூறினார்
இதுகுறித்து பாஜக பிரமுகர் ஒருவர் கூறியபோது, ‘கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக கங்கைஅமரன் போட்டியிட்டார். கங்கைஅமரன் விரும்பினால் மீண்டும் அவரே போட்டியிடுவார். இல்லையெனில் வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவார்’’ என்று கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.