இலங்கையில் வானில் தோன்றிய விநாயகர். பெரும் பரபரப்பு
விநாயகர் சதூர்த்தி தினம் நேற்று நாடு முழுவதும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் ஒருசில வெளிநாடுகளிலும் விநாயகர் சதூர்த்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இலங்கையில் நேற்று வானில் விநாயகர் போன்ற உருவம் தெரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் தமிழர் பகுதியான மட்டக்களப்பில் விநாயகர் போன்ற உருவம் வானில் மேகத்தின் இடையே தோன்றியதாக பரபரப்பு ஏற்பட்டது. வானில் மேக கூட்டங்கள் ஒன்று திரண்டு மேல் எழுந்து வந்தன. அதில், ஒரு மேக கூட்டம் விநாயகர் போல் தெரிந்ததால் அப்பகுதி மக்கள் பரவசம் அடைந்து வானில் தோன்றிய விநாயகரை வழிபட்டனர்.
சாலையில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு விநாயகர் உருவத்தை நோக்கி வணங்கினார்கள். சிலர் பூஜைகளும் செய்தனர். 10 நிமிடங்கள் மட்டுமே தெரிந்த இந்த காட்சி பின்னர் மேகங்கள் கலைந்ததால் கலைந்துவிட்டது. வானில் பிள்ளையார் தோன்றியது பற்றி மக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர்
Leave a Reply
You must be logged in to post a comment.