பழங்கள், காய்கறிகள் என்ன விலை தெரியுமா?

ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது அத்தியாவசிய தேவையான பொருட்களை கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் பலர் திண்டாடி வருகின்றனர். இதனை கணக்கில் கொண்டு தமிழக அரசு தோட்டக்கலைத் துறையின் உதவியோடு ஆன்லைன் மூலமாக ஆர்டர் பெற்று வீட்டுக்கே காய்கறிகள் மற்றும் பழங்களை டெலிவரி செய்யும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது

காய்கறிகள் மற்றும் பழங்கள் தொகுப்புகள் மூன்று விதமாக அமைக்கப்பட்டுள்ளது. ரூபாய் 300, 500 மற்றும் 600 என்ற வகையில் காய்கறியும், ரூபாய் 500, 600, 800 என்ற வகையில் பழவகைகளையும் தோட்டக்கலை துறையின் இணைய தளத்திற்கு சென்று ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் டெலிவரி செய்யப்படும்

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply