shadow

நாளை முதல் அரசு ஊழியர்களும் ஸ்டிரைக். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவு

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு செய்துள்ளதால் பொதுமக்களுக்கு மேலும் சிரமங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்கள் கடும் அவஸ்தையில் உள்ள நிலையில் நாளை முதல் தமிழக அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் களத்தில் குதித்தால் மேலும் பல சிரமங்களை பொதுமக்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும், இதன்பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவதால் ஒருசில அரசியல் கட்சிகளும் நாளை முதல் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் என தெரிகிறது. சென்னையில் இன்று இதுகுறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடந்து வருகிறதாம்

Leave a Reply