பேருந்தில் சென்ன கட்டுப்பாடுகள்

நாளை முதல் தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து இயக்கப்படவுள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளனர். அவை பின்வருமாறு:

பேருந்துகளில் அதிகபட்சமாக 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பயணிகள் இருக்கை மற்றும் நிற்பதற்கான இடங்களில் தனிநபர் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

பேருந்தில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயணிகள் பயன்படுத்த வேண்டும்

ஒருவருக்கொருவர் உடல் ரீதியான தொடர்புகளை பயணிகள் தவிர்க்க வேண்டும்

மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே பயணிகள் பேருந்தில பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

பேருந்தில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது பணியை துவக்கும் முன்பு உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்.

பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்படும்.

பேருந்தில் பயணிகளுக்காக சானிடைசர் வைக்கப்படும். பயணிகள் அதனை பயன்படுத்தி கொள்ளலாம்

ஒவ்வொரு முறை பேருந்து இயக்கத்திற்கு பின்னர் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு போக்குவரத்து அதிகாரிகள் கூறினார்கள்

Leave a Reply