என்னென்ன நிபந்தனைகள்?

சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் நாளை முதல் ஆட்டோக்கள் ஓடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாண்புமிகு அம்மா அவர்களின்‌ அரசு, தமிழ்நாட்டில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டதோடு மட்டுமல்லாது, கொரோனா வைரஸ்‌ நோய்த்‌தொற்றின்‌ தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில்‌ எடுத்து வருகிறது.

பொதுமக்களின்‌ வாழ்வாதாரம்‌ மற்றும்‌ தொற்றின்‌ தன்மையை கருத்தில்‌ கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

தற்போது, சென்னை மாநகராட்சி காவல்‌ எல்லையைத்‌ தவிர தமிழ்நாடு முழுவதும்‌ ஆட்டோ, சைக்கிள்‌ ரிக்ஷா ஆகிய வாகனங்கள்‌ ஒட்டுநர்‌ மற்றும்‌ ஒரு பயணி மட்டும்‌ பயணிக்கும்‌ வகையில்‌, 23.5.2020
அன்று முதல்‌ (தினமும்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை மட்டும்‌ இயக்க அனுமதிக்கப்படுகிறது. நோய்க்‌ கட்டுப்பாட்டு பகுதிகளில்‌ ஆட்டோ, சைக்கிள்‌ ரிக்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில்‌ வாழும்‌ ஆட்டோ/ரிக்ஷா ஒட்டுநார்களுக்கும்‌ இவ்வாகனங்களை ஒட்ட அனுமதி இல்லை.

பயணிகள்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ வாகனங்களில்‌ சானிட்டைசர்களை ஒட்டுநர்கள்‌ வைத்திருக்க வேண்டும்‌. ஒட்டுநர்களும்‌, பயணியர்களும்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிந்திருக்க வேண்டும்‌. மேலும்‌, ஆட்டோ, சைக்கிள்‌ ரிக்ஷா ஆகியவற்றை தினமும்‌ மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்‌. ஒட்டுநா்கள்‌ அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும்‌, வாகனத்தில்‌ சுகாதாரத்தையும்‌ பேண வேண்டும்‌ என
கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply