இன்று நள்ளிரவு முதல் அமல்: வாகன ஓட்டிகள் இனி தப்பிக்க முடியாது!

சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 முதல் பாஸ்ட் டேக் முறை முழு அளவில் அமலுக்கு வருகிறது என்பதால் வாகன ஓட்டிகள் கட்டாயம் இதனை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்க கட்டணத்தை ரொக்கமாக வழங்குவதை தவிர்க்க, ஆன்லைன் முறையில் உடனடியாக பெற்றுக் கொள்வதற்காக பாஸ்ட் டேக் ஸ்டிக்கர்கள் வாகனத்தில் ஒட்டும் முறை அறிமுகம் செய்யப்பட்டது

இந்த முறை இன்று நள்ளிரவு முதல் அதாவது ஜனவரி 15 முதல் அமலுக்கு வரவுள்ளது. சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பாஸ்ட்டேக் ஸ்டிக்கர்களை ஏற்கனவே வழங்கியிருப்பதாக வங்கியாக செயல்படும் பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 40 சதவீத பாஸ்ட்டேக்குகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் மார்ச் மாதத்திற்கு இந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் பேடிஎம் அறிவித்துள்ளது.

Leave a Reply