shadow

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இன்று முதல் பயிற்சி ஆட்டம் தொடக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. வரும் ஜூன் 1 முதல் தொடங்கவிருக்கும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளவுள்ளது.

முதல் போட்டி ஜூன் 1ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கான முதல் போட்டி ஜூன் 4ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று முதல் பயிற்சி ஆட்டங்கள் தொடங்குகின்றன. லண்டனில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிக்கு மோதுகின்றன. இந்தியா 28-ந்தேதி நியூசிலாந்துடனும், 30-ந்தேதி வங்காளதேசத்துடனும் மோதுகிறது. மற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான்- வங்காளதேசம் (27-ந்தேதி), ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் (29-ந்தேதி), நியூசிலாந்து- இலங்கை (30-ந்தேதி) விளையாடுகின்றன

Leave a Reply