அமெரிக்கா: பிரபல பாடகியை சுட்டு கொலை செய்து, தன்னையும் சுட்டுக்கொண்ட மர்ம நபர் யார்?
அமெரிக்க நாட்டின் பிரபல பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி நேற்று தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”தி வாய்ஸ்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளரும் பிரபல பாடகியுமான கிரிஸ்டினா கிரிம்மி நேற்று இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி விட்டு ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கிரிஸ்டினா கிரிம்மி சரமாறியாக துப்பாக்கியால் சுட்டார்.
உடல் முழுவதும் துப்பாக்கி குண்டுகள் துளைத்து பலத்த காயம் அடைந்த கிரிம்மி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து போராடியும் சிகிச்சைபலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
கிரிஸ்டினாவை துப்பாக்கியால் சுட்ட மர்மநபர் உடனே தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கிரிஸ்டினாவையும் கொலை செய்து தன்னையும் சுட்டுக்கொண்ட அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.