பெரும் பரபரப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருதய நோய் காரணமாக திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .அவர் சாதாரண வார்டில்தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கும் அளவுக்கு அவரது உடல்நிலை மோசம் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு அவருக்கு இருதய சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தற்போது அதே இருதயத்தில் தான் அவரது பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன
மிகப்பெரிய பொருளாதார நிபுணர்களின் ஒருவரான மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி கவர்னர் திட்டக்குழு துணைத்தலைவர் மத்திய நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.