shadow

ரூபாய் மூன்று கோடி வழக்கில் மோசடி வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்/

கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆவின்பால் துறையில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டட நிலையில் அவர் தலைமறைவானார்

ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று இரவு அவர் சென்னை அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.