shadow

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மர்ம மரணம்: கொலை செய்யப்பட்டாரா?

அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிவேல் அவரது தோட்ட வீட்டில் நேற்று மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் இது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிவேல். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார்.

இந்த நிலையில் அவரது சொந்த ஊரான தண்ணீர்பந்தம்பட்டி என்ற பகுதியில் உள்ள தோட்ட வீட்டில் நேற்று தனியாக இருந்தபோது திடீரென மரணம் அடைந்தார். அவரது உடலில் காயம் எதுவும் இல்லை என்றாலும் இது கொலையா? அல்லது திடீர் மாரடைப்பா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தெரிந்த பின்னரே அடுத்தகட்ட விசாரணையை தொடக்கவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply