shadow

அறுவை சிகிச்சை செய்த 17 வயது கால்பந்து வீராங்கனை மரணம்: சென்னையில் பரபரப்பு

சென்னையை சேர்ந்த பிரியா என்ற கால்பந்து வீராங்கனைக்கு கால் அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் சற்றுமுன் உயிரிழந்ததார்.

சென்னை வியாசர்பாடி என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது பிரியா என்பவருக்கு கால் சவ்வு பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் அவர் திடீரென உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

17 வயதான பிரியா பெரும் கனவுகளுடன் இருந்த நிலையில் திடீரென காலமாகியுள்ளது அவரது குடும்பத்தினர்களூக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.