shadow

காற்றில் இருந்து உணவு தயாரித்த விஞ்ஞானிகள்

உலகில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து மக்களுக்கும் சாப்பாடு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது விவசாயம் நாளுக்கு நாள் நலிந்து கொண்டே செல்வதால் இந்த அபாயம் இன்னும் சில வருடங்களில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காற்றில் இருந்து உணவுப்பொருள் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளனர். காற்றில் இருந்து கார்பன்டை ஆக்சைடை பிரித்து எடுத்து அதிலிருந்து புரோடீன் பவுடர் தயாரித்துள்ளனர். அதை மனிதர்கள் மற்றும் விலங்குகள் உணவு பொருளாக பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த புரோடீன் பவுடரை மின்சாரத்துடன் சேர்த்து எங்கு பயன்படுத்தினாலும் அது உணவுப் பொருளாக மாறும் மேலும் இதை நிலத்தில் பயன்படுத்துவதன் மூலம் பயிர்கள் செழித்து வளரும். அதிக அளவு மகசூலை கொடுத்து உணவு பொருள் உற்பத்தி பெருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்பன்டை ஆக்சைடு மற்றும் மின்சாரத்துடன் சேர்ந்து தயாரிக்கப்படும் புரோடீன் பவுடர் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தி காய்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பயிர்களின் மகசூலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply