shadow

தற்போது மீண்டும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது,

இந்நிலையில், மதுரையிலும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சுற்றினால் ரூ500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,466 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.7,458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

குறிப்பாக,சென்னையில் மட்டும் 624 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், தென்காசி போன்ற பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.