shadow

கீர்த்தி சுரேஷின் வீட்டில் முழங்கால் அளவுக்கு வெள்ள நீர்.
keerthy
விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக அவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

பாமரர் முதல் பணக்காரர் வரை அனைவரையும் புரட்டி போட்ட சென்னை மழைக்கு நடிகர், நடிகைகளும் தப்பவில்லை. ஏற்கனவே சித்தார்த், ராஜ்கிரண், த்ரிஷா உள்பட பல கோலிவுட் நடிகர், நடிகைகளின் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் வீட்டிற்குள் கிட்டத்தட்ட முழங்கால் அளவுக்கு தண்ணீர் புகுந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறிய கீர்த்தி சுரேஷ், ‘என்னுடைய வீட்டில் வெள்ளம் முழங்கால் அளவுக்கு வந்துவிட்டதால் ஒருசில உடைகள் மற்றும் உணவுகளை எடுத்து கொண்டு மாடிக்கு சென்றுவிட்டோம். மின்சாரம் இல்லாததாலும், வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்ததாலும் இரண்டு நாட்கள் மிகவும் அவஸ்தைப்பட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply