shadow

ஏ.ஆர்.முருகதாசின் அடுத்த படத்திற்கு ஐந்து தயாரிப்பாளர்கள்
murugadoss
இளையதளபதி விஜய் நடித்த ‘கத்தி’, சோனாக்ஷி சின்ஹாவின் ‘அகிரா’ படங்களை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் மகேஷ்பாபு நடிக்கும் படம் ஒன்றை பிரமாண்டமாக இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் உருவாகவுள்ள இந்த படத்திற்கு ப்ரணித்தி சோப்ரா நாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.100 கோடியை விட அதிகமாகும் என்றும் இந்த படத்தை ஐந்து பிரபல நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை  ரிலையன்ஸ், லியோ புரொடக்ஷன்ஸ், மகேஷ்பாபுவின் சொந்த நிறுவனமான எம்.பி.என்டர்டெய்மென்ட், முருகதாசின் சொந்த நிறுவனம் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ஆகிய  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Leave a Reply