கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா: அதிர்ச்சித்தகவல்
கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததால் அங்கு முதலமைச்சராய் பினரயி விஜயன் நெருக்கடி நிலையை அறிவித்தார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவிட்டதை அடுத்து சமீபத்தில் நெருக்கடிநிலை வாபஸ் பெறப்பட்டது
இந்த நிலையில் தற்போது கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா என்ற பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை கேரள அமைச்சர் சைலஜா அவர்கள் உறுதி செய்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.