தமிழகத்தில் முதல் கொரோனா பலி: சிகிச்சை பெற்று வந்த மதுரை நபர் உயிரிழந்தார்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மதுரையை சேர்ந்த நபர் உயிரிழந்ததால் தமிழகத்தில் முதல் கொரோனா பலி ஏற்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மதுரையை சேர்ந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு, வெளிமாநில சென்று வராமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் இவர் என்றும், ஆனால் இந்த மதுரை நபருக்கு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை அதிகளவில் இருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நுரையீரல் தொடர்பாக பிரச்சினை இருந்ததாகவும் தெரிகிறது
#update: Despite our best efforts, the #COVID19 +ve Pt at MDU, #RajajiHospital, passed away few minutes back.He had medical history of prolonged illness with steroid dependent COPD, uncontrolled Diabetes with Hypertension.@MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.