shadow

அதிபர் மாளிகை முன் நிர்வாண போராட்டம் நடத்திய பெண்கள்: அர்ஜெண்டினாவில் பரபரப்பு

பெண்களுக்கு அர்ஜெண்டினால் பாதுகாப்பில்லை என்றும் பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் அர்ஜெண்டினா அதிபர் மாளிகை முன் திடீரென குவிந்த நூறு பெண்கள் நிர்வாணமாக போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஃபெனின்ஸ்ட் என்ற பெண்கள் அமைப்பை சேர்ந்த சுமார் 100 பேர் இந்த போராட்டத்தை நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு 25 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருவதாகவும், அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பதாகவும் ஃபெமினிஸ்ட் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

திடீரென நடந்த இந்த நிர்வாண போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை உயரதிகாரிகள் போராட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செய்யும்படி அறிவுறுத்தினர்

Leave a Reply