டிரம்ப் ஒரு பொய்மூட்டை: முன்னாள் எஃப்.பி.ஐ. இயக்குனர் காட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு புழுகு மூட்டை என்றும், அவரது நடவடிக்கைகள் எரிச்சலடையை செய்வதாகவும், அமெரிக்காவின் முன்னாள் எஃபிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் இந்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
“அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளை அவரை சுற்றியுள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியாது. டிரம்ப்பின் நடவடிக்கைகள் நாட்டின் சட்டம் மற்றும் நேர்மை போன்றவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
மேலும் தனிப்பட்ட முறையில் ட்ரம்ப் மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அவரது நடவடிக்கைகள் மீது வெறுப்பாக உள்ளது குறிப்பாக நாட்டின் சட்டத்தை மீறிய அவரது நடவடிக்கை மீதும், அவரது பொய்கள் மீதும்” என்று கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.