இந்தியாவில் மரணமடைந்த 3 மாத குழந்தை: மஸ்கட்டில் தவிக்கும் தந்தை
இந்தியாவில் உள்ள பிதாபுரம் என்ற பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் தனது மூன்று மாத மகன் இறந்து விட்டதாகவும் ஆனால் தனது மகனின் முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் ஆனால் தான் இப்போது மஸ்கட்டில் இருப்பதாகவும் இங்கிருந்து எந்த விமானங்களும் இயங்கவில்லை என்பதால் தன்னால் இந்தியாவுக்கு வர முடியவில்லை என்றும் ரவிக்குமார் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மஸ்கட்டில் இருந்து மட்டுமின்றி உலகின் எந்த பகுதியில் இருந்தும் இந்தியாவுக்கு வர எந்த விதமான விமானங்களும் இயங்கவில்லை என்றும் இன்னும் சில நாட்களுக்கு இயக்க வாய்ப்பு இல்லை என்பதாலும் அந்த டுவிட்டர் பயனாளியின் கோரிக்கை நிறைவேற்ற வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது
இருப்பினும் இந்த டுவிட்டை பலர் நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் உள்பட பலருக்கும் டேக் செய்து வருகின்றனர். அதன் பயனாக அவர் மஸ்கட்டில் இருந்து இந்தியா வருவதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மீ
Leave a Reply
You must be logged in to post a comment.