செல்போனில் ஆபாச படம் பார்த்த மகனின் கையை வெட்டிய தந்தை
செல்போன் வந்த பின்னர் டீஜ் ஏஜ் இளைஞரகளின் மத்தியில் ஆபாச படம் பார்க்கு வழக்கம் அதிகமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஒரு இளைஞர் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்ததை பார்த்த அவரது தந்தை, அந்த இளைஞரின் கையை வெட்டியுள்ளார்.
ஹைதராபாத்தின் ஜால்பல்லி பகுதியைச் சோ்ந்தவா் குரோஷி. இவரது மகன் தொடா்ந்து தனது செல்போனில் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். மேலும் சக நண்பா்களுடன் சோ்ந்து தொடர்ந்து ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார்.
இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இது தவறான செயல் என்று குரோஷி பலமுறை கூறியபோதும் அவரது மகன் அதனை கேட்பதாக தெரியவிலை. இதனால் வேலைக்கு செல்லாமலும், ஒழுங்காக வீட்டிற்கு வராமலும் இருந்துள்ள மகனை பார்த்து ஆத்திரமடைந்த குரோஷி தனது மகனின் கையை வெட்டியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.