மதுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நெல்லுக்கு கிடையாதா? விவசாயிகள் அதிர்ச்சி

டாஸ்மார்க் கடைகளில் தொடர் திருட்டு ஏற்படுவதை அடுத்து மது பாட்டில்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்படும் நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன

ஒரு சில மாவட்டங்களில் திருமண மண்டபத்தில் அந்த பகுதியில் உள்ள மொத்த டாஸ்மாக் கடைகளின் சரக்குகளும் மாற்றப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது

ஆனால் அதே நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 நாட்களாக நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி கிடப்பதாகவும் அதை பாதுகாப்பதற்கு எந்தவிதமான போலீஸ் காவலும் இல்லை என்றும் அதை விவசாயிகளே பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து மதுபாட்டில்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நெல்லுக்கு அரசு கொடுக்காதது ஏன் என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது

Leave a Reply