shadow

3 வருடங்களுக்கு முன் இறந்து போன மகனுக்கு திருமணம் செய்து வைத்த சீன பெண்
ghost
மூட நம்பிக்கைகள் என்பது இந்தியாவில்தான் அதிகம் இருக்கும் என பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனால் இந்தியாவையே மிஞ்சும் அளவுக்கு சீனாவில் மூடப்பழக்கங்கள் இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது.

சீனாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன ஒரு வாலிபர், திருமணம் செய்யாமல் ஏக்கத்தில் இறந்ததாக கருதிய அவருடைய பெற்றோர்கள் இறந்த மகனுக்கு சமீபத்தில் இறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

இதற்காக இறந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு சுமார் 2 லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர் மூன்று வருடங்களுக்கு முன்னர் இறந்த போன ஆவிக்கும், இறந்த பெண்ணின் பிணத்துக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இறந்துபோன வாலிபரின் தாயாரும் பெண்ணின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் தனது மகனின் ஆவி சாந்தியடைந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

Leave a Reply