shadow

பெண் குழந்தை இருந்ததால் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டாரா பாஜக பிரமுகர்

கடந்த சில நாட்களாக இந்தியாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்வதும், அந்த கொடூர செயலை செய்த குற்றவாளிகளுக்கு பாஜகவினர் ஆதரவு கொடுப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இங்கு பெண் குழந்தைகள் இருப்பதால் பாஜகவினர் ஓட்டு கேட்டு வருபவர்கள் வீட்டிற்குள் வரவேண்டாம் என்ற பதாகை பல வீடுகளில் உள்ளது.

இந்த நிலையில் மும்பையில் ரெயிலில் பயணம் செய்த சில பாஜகவினரை, உடன் பயணித்த பயணிகள், தங்களுடன் பெண் குழந்தைகள் பயணம் செய்கிறார்கள், எனவே ரயிலில் இருந்து கீழே இறங்குங்கள், என்று கூறி இறக்கிவிட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதைத் தொடர்ந்து, அந்த வீடியோ போலியானது என்னும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. உண்மையில், பாஜகவினர் பயணச்சீட்டு இல்லாமல் ஏசி பெட்டியில் பயணித்துள்ளனர். அதைப்பற்றி டிக்கெட் பரிசோதகர் கேட்டதற்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களை பயணிகள் ஒன்று சேர்ந்து ரெயிலில் இருந்து இறக்கி விட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

Leave a Reply