shadow

சென்னை விழாவில் பிரதமரின் பாதுகாப்பு பணியில் போலி போலீஸ்: திடுக்கிடும் தகவல்

கடந்த வாரம் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் பாரத பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். அம்மா ஸ்கூட்டர் விழாவை அவர் தொடங்கி வைத்து சிறப்புரையும் ஆற்றினார்.

இந்த நிலையில் இந்த விழாவுக்கு பாதுகாப்பு அளித்த போலீஸ்காரர்களில் ஒருவர் போலி போலீஸ்காரர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அவருடைய பெயர் அசோக் என்றும், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் என்றும், பிரதமர் விழாவின் பாதுகாப்பில் மட்டுமின்றி அதற்கு முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் நடந்த கமாண்டோ ஒத்திகையிலும் அசோக் கலந்து கொண்டு காவல்துறையை ஏமாற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply