மெரீனாவில் மீண்டும் போராட்டமா? போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
சென்னை மெரீனாவில் கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றபோது பொதுமக்களின் ஆதரவு முழுஅளவில் இருந்ததால், அந்த போராட்டத்தை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் கடைசில் அந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது
இதனையடுத்து மீண்டும் ஒரு போராட்டம் மெரீனாவில் ஆரம்பித்துவிட கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் சற்றுமுன்னர் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான இன்று மெரீனாவுக்கு சாதாரணமாக வருபவர்கள் கூட போராட்டக்கார்கள் போல் பார்க்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.