shadow

10ஆம் வகுப்பு கேள்வித்தாள் லீக்: முன்னாள் அமைச்சர் கைது

பத்தாம் வகுப்பு கேள்வித்தாள் லீக் ஆன சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நாராயணா குருப் என்ற பெயரில் கல்வி நிலையம் நடத்தி வரும் முன்னாள் ஆந்திர மாநில அமைச்சருமான நாராயணன் என்பவர் சிஐடி போலீசார் நேற்று கைது செய்யப்பட்டார்

பத்தாம் வகுப்பு கேள்வித்தாள் லீக்கானதற்கு இவரும் ஒரு காரணமென கைது செய்யப்பட்டுள்ளது

அவர் மட்டுமின்றி மேலும் ஒன்பது நபர்களும், பள்ளி ஊழியர்களும் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

தனது நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக கேள்வித்தாளை லீக் செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது