கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் கூறிய அதிரடி குற்றச்சாட்டு
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை மட்டுமே பிரதானமாக சந்தைப்படுத்தும் நடைமுறையை கூகுள் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், ஆண்ட்ராய்டை விட அட்வான்ஸாக வெளிவந்துள்ள தொழில்நுட்பங்களை கூகுள் நிறுவனம் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு பதிவு செய்து வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வெளிவந்தால் அந்நிறுவனம் மிகப்பெரிய தொகை ஒன்றை இழப்பீடாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனம், அதன் ஆண்ட்ராய்டு கணினி இயங்குதளத்தை (ஆபரெட்டிங் சிஸ்டம்) சந்தைப்படுத்தும் நடைமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து, அந்த நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் ‘போட்டி வணிகத்துக்கு எதிரான செயற்பாடுகளின்’ கீழ் குற்றச்சாட்டு ஒன்றை பதிவுசெய்துள்ளது. உலகின் 80% ஸ்மார்ட் ஃபோன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் உள்ளது. இதைவிட அதிகனான தொழில்நுட்ப இயங்குதளங்கள் மார்க்கெட்டில் இருந்தபோதிலும் கூகுள் நிறுவனம் அதை அங்கீகரிக்காமல் வைத்துள்ளது. கூகுளின் இந்த ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் வளரும் தொழில்நுட்பத்தை முடக்குவதான செயல் ஆகும். கூகுள் நிறுவனம் அதன் சொந்த செயலிகளையும் சேவைகளையும் நிலையான ஏற்பாடுகளாக முன்கூட்டியே உள்ளீடு செய்துவிடுகின்றது.
உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள், வாடிக்கையாளர்களின் தெரிவுகளை சுருக்கி- புதுமைகளை முடக்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களை மீறுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி வணிகம் தொடர்பான ஆணையர் மார்கிரெத்தே வெஸ்டாகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கு மிக விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.