உடலுறவின்போது 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த காதல் ஜோடி
3வது மாடியில் பால்கனியில் காதல் ஜோடி ஒன்று உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்ததால் பரிதாபமாக பலியான சம்பவம் ஈகுவடார் நாட்டில் நடந்துள்ளது
ஈகுவடார் நாட்டில் உள்ள இளம் பெண் ஒருவர் தனது காதலருக்கு விருந்து கொடுத்துள்ளார். விருந்து முடிந்தவுடன் இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். பால்கனியில் நின்றபடியே உடலுறவு கொண்டு இருந்த நிலையில் திடீரென நிலைதடுமாறி இருவரும் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.
அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே அவர்களுடைய உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இதனையடுத்து இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் உயிரிழந்த பெண்ணுக்கு எட்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.