விவசாயிகளுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வர்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு பல்வேறு அதிரடி சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்த அதிரடி அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்து அனுமதி, குளிர்சாதன கிடங்கு போன்ற சேவைகளுக்கு இந்த எண்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து என்றும், குளிர்பதன கிடங்கு பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை வசூலிக்கப்படாது என்றும், காய்கறிகள் மற்றும் பழங்கள் சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.,
Leave a Reply
You must be logged in to post a comment.