shadow

சட்டப்பேரவையில் அருகருகே இபிஎஸ் – ஓபிஎஸ்: பரபரப்பு தகவல்

இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில மாதங்களாக அதிமுக இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது என்பதும் இது குறித்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியபோது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும்ம் அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது