ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு உதவிய மத்திய அமைச்சர் திடீர் மரணம்
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே சற்று முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60
மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அனில் மாதவ்தவே, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட இவர் மத்திய அமைச்சராகவும் மோடி அமைச்சரவையில் திறமைமிக்க ஒருவராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்றபோது, தமிழக அரசு, அனில் மாதவ் தவேயிடம் ஜல்லிக்கட்டு தொடர்பான கோரிக்கைகளை கொண்டு சென்றது என்பதும் அவசர சட்டம் இயற்ற தேவையான் உதவிகளை இவர் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.