shadow

முதல் 20 ஓவர் போட்டி. பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து
cricket
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டி தொடரில் நேற்று முதலாவது போட்டிதுபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தனர். இதன்பின்னர் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply