ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளதால் ஐந்தாவது போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்தது. மாக்ஸ்வெல் 85 ரன்களும், பெய்லி 75 ரன்களும், வாடே 50 ரன்களும் எடுத்தனர்.
300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 48.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மோர்கன் 92 ரன்களும், டெய்லர் 41 ரன்களும், ஸ்டோக்ஸ் 41 ரன்களும், எடுத்தனர். மோர்கன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான 5வது போட்டி நாளை மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.