shadow

தமிழ்நாட்டில் மின் தேவை உயர்ந்துள்ளது: அமைச்சர்

வடசென்னையில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து அவர், தமிழ்நாட்டில் மின் தேவை 16 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

வடசென்னையிலுள்ள மின் நிலையத்திற்கு 1 நாளைக்கு 8,800 டன் நிலக்கரி தேவை உள்ளதோடு, குறைந்த நிலக்கரியில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறினார்.