shadow

2 தொகுதிகளிலும் உடனே தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டில் திமுக மனு
karunanidhi interview
தமிழகத்தில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் குறித்து பல்வேறு மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்த இரண்டு தொகுதிகளிலும் மே 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படாது என்றும் அதற்கு பதிலாக ஜூன் 13-ம் தேதி தேர்தல் நடத்தவுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் 2 தொகுதிகளின் வாக்கு எண்ணும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஜூன் 20-ம் தேதிக்குள் முடிவடையும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்தும், மே 23ம் தேதியே இவ்விரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக, நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணகுமார் இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்கள் என்று தெரிகிறது.

Leave a Reply