தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 8 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 பேர்களாக உயர்ந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஈரோட்டை சேர்ந்த எட்டு பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து எட்டு பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒருவருடன் இவர்கள் எட்டு பேர்களும் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply