shadow

விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

vijay mallaiahஇந்திய வங்கிகளில் சுமார் 9000 கோடி கடன்வாங்கிவிட்டு திருப்பி கட்டாமல் பிரிட்டனுக்கு தப்பியோடிவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 6,630 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பொருளாதார அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. இதனால் கடன் கொடுத்த வங்கிகளுக்கு பணம் விரைவில் திரும்ப கிடைத்துவிடும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை இங்குள்ள விசாரணை முகமைகள் மேற்கொண்டுள்ள நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இதுதொடர்பான வழக்கில் ஜூலை 29-ம் தேதி விஜய் மல்லையா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், வழக்கு விசாரணையின்போது விஜய் மல்லையா ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு சொந்தமான சுமார் 6,630 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதாக பொருளாதார அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது.

Leave a Reply