shadow

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி

இந்தோனேசியாவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் ஆனால் அதே நேரத்தில் சுனாமி போன்ற பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இந்த நிலநடுக்கம் இல்லை என்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இருப்பினும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் இருக்கின்றனர். வீட்டிற்குள் யாரும் செல்லாமல் சாலையிலேயே நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது