shadow

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்ததால் இன்று ஒரு நாள் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வழக்கம்போல் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.