shadow

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் நேற்று இரவு பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வந்ததை அடுத்து 6 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்

குறிப்பாக கடலூர் விழுப்புரம் வேலூர் கள்ளக்குறிச்சி திருவாரூர் நெல்லை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.