shadow

பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை புகையைக் கக்கத் தொடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள “டால் எரிமலை” திடீரென்று மேலெழும்பி விண்ணை முட்டும் புகையை வெளியேற்றி வருவகிறது.

இதனால் அப்பகுதிகளில் வசிக்கக் கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்களை அரசு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியது.

கடந்த 1911ம் ஆண்டு ஏற்பட்ட வெடிப்பில் ஆயிரத்து 300க்கும் அதிகமானோரை பலி கொண்டது குறிப்பிடத்தக்கது.