கல்கி அவதாரத்துக்கு பதில் கொரோனா அவதாரம்: டாக்டர் கமலா செல்வராஜ்

கலிகாலத்தில் பகவான் கல்கி அவதாரம் எடுப்பதற்கு பதிலாக கொரோனா அவதாரம் எடுத்துள்ளார் என்றும் இனிமேல் தான் பூகம்பம் இருக்கின்றது என்றும் இனி கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்றும் ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்

வெளிநாட்டு இந்தியர்களை உள்ளே விட்டது மிக மிக தவறு என்றும் அவர்களை விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் அவர்களால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை என்றும் அவர் கூறியுள்ளார்

மனிதன் என்றைக்கு பாம்பை சாப்பிட ஆரம்பித்தானோ, அன்றைக்கே மனிதனுக்கு அழிவு ஆரம்பித்துவிட்டது என்று 400 வருடத்திற்கு முன்பே ஒரு சித்தர் கூறி இருப்பதாகவும் டாக்டர் கமலா செல்வராஜ் அந்த வீடியோவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply