ஆபரேஷன் தியேட்டரில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய டாக்டர் மீது வழக்கு
டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனியார் மருத்துவமனையில் ஒன்றுக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அந்த பெண்ணுக்கு ஒரு சிறு ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இளம்பெண்ணும் அதற்கு சம்மதிக்கவே ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த இளம்பெண்ணிடம் ஆபரேசன் முடிந்துவிட்டதாகவும், அவர் வீட்டுக்கு செல்லலாம் என்றும் கூறியுள்ளார். ஆனால் தனக்கு ஏற்பட்ட வலி சிறிதும் குறையவில்லை என்பதையும் தன்னுடைய உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை வைத்தும் ஆபரேசன் தியேட்டரில் டாக்டர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டிருப்பதாக அந்த இளம்பெண் புரிந்து கொண்டார்
இதனையடுது டெல்லி காவல்நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிசார் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.